Monday, September 5, 2011

10. இயல்பு நிலை









10. இயல்பு நிலை

``மனித இயல்பு நிலையை உணர்ந்து, ஆற்றல் நிரம்பிய மனித இயல்புணர்வை நோக்கி பயணம் செய்ய நாம் முடிவெடுப்போம்’’.

இயல்புணர்வின் அனபவங்கள் ஆழ்மனத்தில் நுழைந்த போது, அவை உங்கள் இயல்பு எது என்பதை நிர்ணயிக்கத் தொங்குகிறது. எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய, தனக்கே இயல்பாக உள்ள ஆற்றலைக் கண்டறியக் கூடிய, அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளர்க்கத் தொடங்கிவிடுகிறது.

ஒவ்வொருவரும் தங்களுள் இயற்கையாக அமைந்துள்ள இயல்பு நிலையை அறிந்து கொள்வதைப் போன்ற சாதனை எதுவும் இல்லை. தன்னைத் தானே உணர்வது வாழ்க்கையின் பெரிய செயல்பாடாகும். விலங்குகள் இயல்பு நிலையில் அடிப்படையில் அவைகள் வாழ்கின்றன. இந்த இயல்பை அறிந்து கொள்ளவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியாது. ஏதேனும் ஒருவகையில்தன் இலக்கை அடைய செய்கின்றன. அது ஓர் அமைப்புத் திட்டத்தைப் போல செயல்படுகிறது. விலங்குகள் பிறக்கின்றன, வாழ்கின்றன இயல்பைப் பற்றியெல்லாம் அவை ஒரு போதும் சிந்திப்பதில்லை. அதை அவை வெறுமனே தொடர்ந்து செய்கின்றன.

விலங்குகள் சிந்திப்பதற்கும், மனிதர்கள் சிந்திப்பதற்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. இயல்பு நிலையில் அடிப்படையில் வாழ்வதைக் காட்டிலும் தன்னியல்பை சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்வது சிறந்தது. இதற்கான சாத்தியக் கூறுகளுக்கு எல்லைகள் இல்லை. சுதந்திராகக் காற்றுக் கொள்ளவும், வளரவும், சோதிக்கவும், படைக்கவும் நாம் அறிவோம். தெரிந்து விழக் கூடிய அறிவுத் திறனை நம்முடைய மூளை பெற்றிருக்கிறது. நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள நாம் அறிவோம். ஒரு குறிப்பிட்ட தேர்வு ஒரு குறிப்பிட்ட விளைவைத் தரும் என்பது நமக்குத் தெரியும். இந்த மண்ணில் நம்முடைய இருத்தல் நிலைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்க முடியும். இதற்கப் பிறகு, நாம் எதைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என்றுகூட நாம் யாராக இருக்க விரும்புகிறோம். அப்படி இருப்பதற்குத் தேவையான ஆற்றல் நம்மிடம் உண்டு.

மானுட வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகிய இயல்பு நிலையை எண்ணிப் பார்க்கவும் நோயில்லாமல் எந்திரமாக இயங்குகின்றோம். இன்றைய மனிதன் எங்கிருந்து வந்தோம்; எதற்காக வாழ்கின்றோம்; எப்படி வாழ்கின்றோம்-என்று எண்ணிப் பார்க்கின்ற மனிதன் தன் வாழ்வுக்கப் பொருளை காண்கின்றோம். துன்பம் கலவாத இன்பத்தையும், குறை காணாத நிறைவையும் பெற முயலுகின்றான். எவற்றையெல்லாம் நிலையானவை என்று கருதினானோ அவையெல்லாம் கால வெள்ளத்தால் கனாக்க முடியாத உறுதிப் பொருளை நோக்கி ஒடுகின்றான். ஓடி ஒய்ந்தவன் தன்னுள்ளேயே அந்த இயல்பு பொருளை இயல்பு நிலையில் காண்கின்றான். தன் அறியாமையை எண்ணி நாணுகின்றான். காலத்தை வீனோ கழித்து விட்டதற்காக வருந்துகின்றான். அந்த இயற்கையின் இயல்பான ஒரு கூறு மனிதன். இவ் இயல்புநிலை போக்கை அமைதியாக ஏற்று நிறைவாக வாழ்ந்திட வேண்டும்.

தன் இயல்புநிலையை அறிந்துணர்ந்து அதில் ஐக்கியமாவதே உயர்ந்தநிலை வேறு ஒரு சாதனை தேவையில்லை. சரணாகதி தான் விமோசனம் உங்களை நீங்கள் அறியுங்கள் அதான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களை அறிவதுதான் இறைவனை அடைவதற்கான வாயில் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையினால் உங்களுக்குள் நீங்கள் பயணம் செய்யத் துவங்க வேண்டும்.

``இயல்புணர்வுகளின் அனுபவங்கள் ஆழ்மனத்தில் நுழைந்த போது அவை உங்கள் இயல்பு நிலை எது என்பதை நிர்ணயிக்கத்  தொடங்குகிறது’’.

No comments:

Post a Comment